Friday, August 28, 2009

கொலுவோ கொலு....


ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இதோ என் முதல் தமிழ் பதிவு (வடிவேலு பாஷையில் ''முடியல'' சொல்றது காதில் விழுகிறது)
Statutory Warning: naan appo appo pesara thamizhla ezhudi irukken, so spelling mistakes parthutu correction sonna kadi ayiduven (kidding, I will be a sport...well, mostly :D ) and since I assume ''எம் தாய் மொழியை யாம் நன்கே அறிவோம் !'', here goes.....

வீட்டில் நடக்க கூட இடம் இல்லாத அளவிற்கு படி கட்டி ஒரு நாள் முழுவதும் கொலு வைத்ததும் உண்டு...
இடப்பற்றகுறையை காரணம் காட்டி 5 படிகள் கொண்ட showcaseல் பொம்மையை அடிக்கியதும் உண்டு...

மண் கொட்டி, செடிகள் நட்டு, மிருக பொம்மைகள் வைத்து park கட்டியதும் உண்டு...
மாக்கோலம், பூக்கோலம், தோரணம் என்று அலங்காரம் பண்ணியதும் உண்டு....
showcase கொலுவிற்கு கலர் பேப்பர் கட்டி twinkling lights போட்டதும் உண்டு....

கண்ணாடி குங்குமச்சிமிழ் சீப்பு வாங்க T-Nagar ரங்கநாதன் தெருவில் அலைந்ததும் உண்டு....
மாமிகளுக்காக கூடை கூடையாக blouse bit தூக்கி வந்ததும் உண்டு....
அதில் யாருக்கு என்ன கலர் குடுப்பது என்று மணி கணக்கில் யோசித்ததும் உண்டு...

அப்பா மூட்டை மூட்டையாக தேங்காய் வாங்கியதும் உண்டு...
அம்மா ஆளுக்கு ஒன்று என்று பங்கு பிரித்ததும் உண்டு...
ஏற்கனவே தேங்காய் பெற்றவர்கள் பெறாதவர்குளடன் வந்து விட்டால் அதை master strategy உபயோக படுத்தி சமாளித்ததும் உண்டு....

வெற்றிலை பாக்கு செட் செட்டாக எடுத்து வைத்ததும் உண்டு....
சுண்டல் மடிக்க பழைய Hindu பேப்பரை கிழித்து வைத்ததும் உண்டு...
''நன்னா பொட்டலம் கட்டிற்கியே'' என்று வந்திருக்கும் மாமியிடம் Certificate வாங்கியதும் உண்டு...
அதே சுண்டலை Ziplock கவரில் போட்டு குடுத்ததும் உண்டு....

வெள்ளி கிழமை என்றால் ''புட்டு'' உண்டு......
எனக்கு புட்டு ரொம்ப பிடிக்கும் என்பதால் அன்றைய தினம் மாமிகள் கூட்டம் கம்மியாக வர வேண்டுமே என்று ஸ்வாமீயிடம் வேண்டியதும் உண்டு....
வந்த மாமிகளுக்கு இரண்டே இரண்டு ஸ்பூன் புட்டு பொட்டலம் கட்டி குடுத்ததும் உண்டு....

நன்றாக சமைக்க தெரிந்த மாமிகள் வீட்டிற்கு தினமும் collectionகாக போனதும் உண்டு....
வெந்ததும் வேகாததுமாக சுண்டல் செய்யும் மாமிகள் வீட்டில் ஒரே ஒரு நாள் தலையை காமித்து விட்டு ஓடி வந்ததும் உண்டு...

அம்மா அழைக்க சொல்லி கொடுத்ததை மனப்பாடம் பண்ணியதும் உண்டு.....
அதை மறக்காமல் ''எங்க ஆத்துல கொலு வெச்சுருக்கோம், வெத்தல பாக்கு வாங்கிக வாங்கோ'' என்று மழலையாக சொன்னதும் உண்டு....

தாத்தாவிடம் நவராத்திரிக்கு அம்மன் பாட்டு கற்றதும் உண்டு.....
அப்படி கற்ற ஒன்று இரண்டு பாடல்களை மாற்றி மாற்றி எல்லார் வீட்டிலும் பாடியதும் உண்டு....
முன்பு பாடிய வீட்டிலிருந்து யாரவது வந்து விட்டால், அவர்கள் போகும் வரை காத்திருந்து அதே பாடலை பாடியதும் உண்டு...
ஸ்ருதி பெசகாமல் பாட வேண்டுமே என்று பயந்ததும் உண்டு...
அப்படி பாடி விட்டால் இன்னொரு பாட்டு பாட சொல்வார்களோ என்று நினைத்தும் உண்டு...
பாடுகிற போது அந்த வீட்டின் வானர கூட்டம் ஜாடை காட்டி கேலி செய்ததும் உண்டு....
போனால் போகட்டும் என்று கடைசியில் அந்த கூட்டத்தை பார்த்து ஒரு புன்சிரிப்பு உதிர்த்ததும் உண்டு....

குழந்தை கிருஷ்ணராக வேடம் இட்டதும் உண்டு....
ஊசிமணி பாசிமணி குரத்தியாக குதித்ததும் உண்டு....
மடிசார் மாமியாக கரண்டியுடன் சென்றதும் உண்டு....
அந்த மடிசார் கழண்டு அதை கையில் பிடித்து கொண்டு அவசரமாக திரும்பியதும் உண்டு....
முதல் முறையாக தாவணி போட்ட உற்சாகத்தில் அந்த வருட கொலுவுக்கு நாள் ஒரு மேனி பொழுது ஒரு வண்ணமாக வித விதமாக பட்டு பாவடை தாவணி போட்டதும் உண்டு......
அதற்கு அடுத்த வருடம் நவராத்திரிக்கு அவைகள் எல்லாம் பீரோவில்தூங்கியதும் உண்டு.....
பாட்டியின் பட்டு புடவையை கட்டியதும் உண்டு....
அதை பார்த்து தாத்தா ''ஆஹா என் பேத்தி வளர்ந்து விட்டாள்'' என்று பூரித்ததும் உண்டு....

அம்மாவுடன் காலையில் தூக்க கலகத்தோடு ஸ்லோகம் சொன்னதும் உண்டு...
அம்மன் அலங்காரம் பார்க்க சாயங்காலம் தெருகோடி கோயிலுக்கு சென்றதும் உண்டு...

சரஸ்வதி பூஜை அன்று ''அப்பாடி படிக்க வேண்டாம்'' என்று எல்லா பள்ளி கூட புத்தகத்தையும் பூஜையில் வைத்ததும் உண்டு...
கல்லூரி பரீட்சை அடுத்த நாள் என்பதால் பூஜை அன்றும் பரபரப்பாக படித்ததும் உண்டு....

விஜயதசமி அன்று புது சைக்கிள் ஒட்டியதும் உண்டு....
அன்றே விழுந்து வாறி அப்பாவிடம் திட்டு வாங்கியதும் உண்டு...
விஜயதசமி அன்று Hindi Class சேர்ந்ததும் உண்டு....
Visharat பரீட்சைக்கு படிக்கும் பொழுது ஏன்டா சேர்ந்தோம் என்று நொந்து கொண்டதும் உண்டு...

கொலு முடிந்தவுடன் பொம்மைகளை பார்த்து பார்த்து பேப்பரில் சுற்றி பரண் மீது வைத்தும் உண்டு...
showcase கதவை மூடி அதுத்த கொலுவிற்கு பார்த்து கொள்ளலாம் என்று விட்டதும் உண்டு....

இன்று நான் இருக்கும் இடத்தில் கொலு இல்லை....அதை கொண்டாட நேரமும் இல்லை, மக்களும் இல்லை, ஆனால்.....
....இப்பொழுதும் நினைத்து நினைத்து மகிழும் நினைவுகள் உண்டு....ஞாபகங்கள் உண்டு....

18 comments:

  1. Arumai.. Ennaku indha nenaivugal ellam aappaadiye undu. En kannil oru neer thuli after a very long time, after I read your post.. You brought back so much memories :)

    Was just thinking about navarathri and I am going home mid navarathri this time after a very long time. usually its on the saraswathi pooja day :)

    Fabulous work!!!!! :) This post made my day!!!

    ReplyDelete
  2. Guy's version..
    பரணிலுருந்து அட்டை பெட்டிகள் இறக்கி குடுத்ததுமுண்டு..(படிக்கு பதில்!!)
    படிகள் செய்ததும் அதை அசெம்பிள் செய்ய முதுகு ஒடிந்ததும்முண்டு..
    பட்ட வலி மாலையில் வரும் “கல்ர்களினால்” பறந்துப்போனதுமுண்டு..
    அக்கம்பக்க வீடுகளில் தசாவதார வரிசை சரி செய்த்துமுண்டு..
    விதவிதமாய் சுண்டல்கள் சுவைத்ததுமுண்டு..
    அதனால் “பின்”விளைவுகளைச் சந்தித்ததுமுண்டு..
    வருடாவருடம் தொடர்கிறது இந்த விளையாட்டு..
    பாட்டி இறந்ததினால் இந்த வருடம் கிடையாதாம்.. முதுகு தப்பித்தாலும் மனது ஏங்குகிறது..

    ReplyDelete
  3. @Dew drop
    mikka nandri hai :D

    @Bharath
    hehehe, super ! nethiku ezhudarche im plus undu serthu 'mundu' ezhudalama vendamanu romba neram osichitu vittuten, ippo idhu parthu ezhudirkalamonu thonardhu :)

    ReplyDelete
  4. ஆஹா சூப்பர்.

    வாச திண்ணைல ஒக்காந்துகிட்டு வித வித பேஷன் ஷோ பாக்கர் சுகமே தனி. :) எல்லாம் மிஸ்ஸிங் இப்போ.

    என் நீங்க ஜெர்மனில கொலு வைக்க கூடாது. அப்படியே நாலு பேரை கூப்பிட்டு சுண்டல் பண்ணி போடலாமே.

    தமிழ் நல்லாத்தான் எழுதறீங்க. என்னைய விட எழுத்துப்பிழை கம்மியாத்தான் இருக்கு. :) தொடர என்னுடைய வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  5. forgot to mention. Very nice post.. could have made it more timely(after 20days).. appappa surprise us like this..

    waiting for ur seinfeld post!!

    ReplyDelete
  6. @Bharath

    'Studying in Germany' madhri innum sila peru navarathri pathi ezhuda arambichita ?! as you get closer to navarathri, probability keeps increasing...adhan namma mundikalamenu....

    "very nice post" - en thamizh postku idhu bayangara compliment, esp. coming from you (I have heard of lot of yourthamizh patru stories from Ramya :D)

    ReplyDelete
  7. hee hee u r making me a tamizharingar!!! which is absolutely not.. i enjoy reading tamizh and get irritated if somebody tells me that they don't know thamizh becuase they lived in Sagar/Jabalpur for 3yrs!!!!

    ReplyDelete
  8. Bharath, What bout persons living in Chennai and saying that they dont know to read Tamil :-)

    ReplyDelete
  9. >>என் நீங்க ஜெர்மனில கொலு வைக்க கூடாது. >>அப்படியே நாலு பேரை கூப்பிட்டு சுண்டல் பண்ணி >>போடலாமே.
    adhu seri ! kashta pattu padi katti, bommai thedi pidichu vechalum, weekend dhan ellarkum time irukkum....apdiye koopitalum en german friendsa kooptu explain panna dhan undu (inga enakku desis yarayum theriyadhu) and avaluku kudukka uppu karam podama dhan sundal pannanum !

    >>தமிழ் நல்லாத்தான் எழுதறீங்க. என்னைய விட >>எழுத்துப்பிழை கம்மியாத்தான் இருக்கு. :)
    idhu konjam vanja pugazhchi madhri irukke....

    ReplyDelete
  10. நீங்க முனிச்ல தானே இருக்கீங்க. தேசிஸ் நண்பர்கள் இல்லையா ?? ஒன்பது படி வேணாம் மூணு படிக்கு ஒண்ணு வைங்க. :-) .. வகை வகையா சுண்டல் பண்ணுங்க .. தினம் பண்ணாட்டியும் சனி ஞாயிறு மட்டும் பண்ணுங்க. :-)

    முன்னாடியே இதை எல்லாம் சொன்னா பக்கத்து ஊருல இருந்து வீக் எண்டு டிக்கெட்ல ஒரு கும்பலே வரும். அதோட ஜெர்மன் ரொம்ப ஆர்வமா காரணம் எல்லாம் கேப்பாங்க .. நீங்களும் நிறைய தெரிஞ்சுக்கலாம்.

    அட உண்மையா தாங்க சொன்னேன். வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் இல்லீங்க. மெய்யாலுமே தான். எழுதின 'உண்டு' விதம் ரொம்ப நல்ல இருந்தது.. :-)

    ReplyDelete
  11. அருமை மகளே :

    உன்னுடைய எழுத்து கட்டுரை போல் இல்லாமல் சிறுகதை போல் மிகவும் நன்றாகவே இருக்கிறது! உன் பணி தொடரட்டும்! தமிழ் கூறும் நல்லுலகம் உன் பேர் சொல்லட்டும்! உன் தமிழ் நடை உயிரோட்டத்துடன் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் உள்ளது. உன் ஓய்வு நேரத்தில் நீ கதை எழுதி தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் நிச்சயம் பிரசுரம் செய்வார்கள்! வாழ்க என் மகளே நீ வாழ்க! வளர்க உன் தமிழ்ப்பணி!

    அன்புடன்
    அப்பா

    ReplyDelete
  12. இதுக்கு மேல வேற என்னங்க வேணும்..

    அப்பவே சொல்லிட்டாங்க.. இனி வாரம் குறைந்தது ஒரு பதிவாவது தமிழ்ல எழுதுங்க :-)

    ReplyDelete
  13. @SK
    varam oru post konjam kashtam, ana masathuku onnu kandippa ezhudaren...first postla konjam unarchi vasa pattu standard higha set pannitenonu thonardhu, ippo adha meet panna vendiya oru poruppu vera !

    ReplyDelete
  14. உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் மாசத்துக்கு ரெண்டு பதிவு தமிழ்ல எழுதுங்க.

    நீங்களே இப்படி சொன்னா எப்படி .. இப்போ தான் DEW அவுங்களையும் தமிழ்ல எழுத வைக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். :-)

    இன்னொரு நேயர் விருப்பம் : மாணவர்கள் வெளிநாடு வரும் பொழுது குறிப்பாக உள்ள கலாச்சார மாற்றம் (cultural Shock) பத்தி ஒரு பதிவு எழுதுங்க. என்ன என்ன மாற்றம், மாணவர்கள் என்ன என்ன தெரிஞ்சுக்கணும். நீங்க ஜெர்மனி பத்தி மட்டும் எழுதுங்க அது ஐரோப்பாவிற்கு பொருந்தும். ஆனா கொஞ்சம் கொஞ்சம் மாறு படும். ஏன் அப்படின்னா சிங்கப்பூர் செல்லும் மாணவர்களுக்கு இதுவே வேற மாதிரி அமையும். ஆங்கிலத்தில் எழுதினாலும் சரி, தமிழில் எழுதினாலும் சரி. ஏணிப்படிகள் பதிவில் வெளியிடலாம்.

    ReplyDelete
  15. chinna vayasula ammavum naanum senjadhelaam nyabagathuku vandhuduthu ! kavala padadha, nee india vandhadhum grand'a golu vechu asathidalamnu amma appa solla sonna... amma'oda maamigal gang'oda navaavaranam unga aathula vandhu paadiyum asathidalamnu sonna (!)...

    ReplyDelete
  16. nice post ka....it took me 45 mins to read it...enna panardu.....ezhutu kooti kooti padichen :( unga aathu bommaikal enaku romba pidikum....unga aathuku vandaale naan showcase kittaye than nippen....enga aatuleyum vechu irukom golu...aana avlo grand-ah illai :( inge tamizh kaara irukarde 4-5 families thaan....u reminded me of my navarathris at jaya pati's place...uppu, me and swetha akka nareya enjoy pani irukom, paatu paadi irukom, pavadai ellam potu kalaki irukom ;) I miss those days

    ReplyDelete
  17. Wow!!! Super Sowmya...
    I usally read your blogs but today it was really awesome wjhich I could'nt be a silent reader..Keep it up..it was very interesting to read...
    Happy sarawathi pooja and vijaya thasami...
    Regards,
    Sureka

    ReplyDelete
  18. @shruti
    thanks and yeah, Golu makes me very nostalgic too

    @sureka
    thanks and my Navaratri wishes to you too

    ReplyDelete

Hit Counter
Website Hit Counter I had decided to have a counter only after I hit a 1000 views and since it happened last week (as on 14 Dec 2009), now is the time to see some stats :)